
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நேற்றைய தினம் 66 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுள் 31 பேர் கடற்படையினர் என்பதோடு ஏனைய 35 பேரும் வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 19 பேர் கட்டாரிலிருந்தும், இரண்டு பேர் குவைட்டிலிருந்தும் நாடு திரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட 14 தொற்றுறுதியானவர்கள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் நாட்டில் மேலும் 13 கொவிட்-19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 இலிருந்து இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 902 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரையில் 11 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.