
போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க காவல்துறையினரின் விசேட வேலைத்திட்டம்
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரின் உதவியையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
14 June 2025