
ஏ9 வீதியில் பனிக்கன்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற கோர விபத்து
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் 232 ஆவது கிலோமீற்றருக்கும் 233 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது
இதன்போது தெய்வாதீனமாக யாருக்கும் உயிர்ச் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் தெரிய வருகையில்
வவுனியா நோக்கி பெக்கோ இயந்திரத்தை ஏற்றி வந்த வாகனம் ஒன்று வாகனத்தின் சில்லு காற்றுப் போன நிலையில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் வவுனியாவை நோக்கி வருகைதந்த மற்றுமொரு கொண்டெய்னர் பாரவூர்தி வாகனம் குறித்த வாகனத்தில் மோதுண்டு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது
குறித்த வாகனங்கள் கடுமையாக மோதுண்டு சேதமடைந்துள்ள போதும் தெய்வாதீனமாக உயிர்ச் சேதங்கள், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மாங்குளம் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.