
உணவு அருந்திக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 08 வயதுடைய - நிரோயன் றுசாந்தன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக, தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து இன்று காலை விழுந்ததில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாயார் உணவு தயாரித்துக் கொண்டிருந்த வேளை குறித்த சிறுவன் உணவருந்திக் கொண்டிருந்துள்ளான்.
இதன்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன், அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக எமது செய்திளார் தெரிவித்தார்.