அகவணக்கத்துடன் வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள்...!

அகவணக்கத்துடன் வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள்...!

இம்முறை தீபாவளியை வீடுகளிலிருந்தே கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றனர்

இம்முறை தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து இறை பிரார்த்தனையோடு கொண்டாடுங்கள்.

இந்த கொடிய கொரோனாநோயிலிருந்து நாம் விடுபட வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வீட்டிலிருந்து அமைதியான முறையில் கொண்டாடுங்கள் என நேற்று யாழ்ப்பாணம் இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்துமதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உலகளாவிய ரீதியில் கொரோனாதாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இலங்கையிலும் தற்போது தொற்று வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

எனவே தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இந்து மக்கள் தீபாவளியை வீடுகளிலிருந்து ஒன்றுகூடல்களை தவிர்த்து அகவணக்கம் ஊடாக கொண்டாட வேண்டும்.

அவ்வாறு கொண்டாடுவதன் மூலம் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.

அத்துடன், தீபாவளி நாளன்று ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ளாது வீடுகளிலிருந்து தத்தமது குலதெய்வங்களை பிரார்த்தியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.