
மகாத்மா காந்தியை சுட்டக்கொன்ற கோட்சேவுக்கு மரணதண்டனை வழங்கிய நாள்: 15-11-1949
கோட்சே மகாத்மா காந்தியை ஜனவரி 30, 1948 அன்று மாலை நேர காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் அவரை மண்டியிட்டு வணங்கியபின் கைத்துப்பாக்கியால் காந்தி மீது மூன்று முறை சுட்டுக்கொலை செய்தார். காந்தி இந்தியப் பிரிவினைக்கு ஆதரவாக செயல்படுவதை எதிர்த்து இக்கொலைச் செயல் புரிந்தனன். உடனே காவல் துறையினரிடம் சரணடைந்தார்.
மே 27, 1948 ல் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்தரப்பு வாதங்களுக்காக அவர் எதிர்த்து வாதாடவில்லை. அவர் தரப்பு வழக்குரைஞர்கள் மிகவும் தந்திரமாக அவர் மனநிலையை காரணம் காட்டி வாதாடினர். இருப்பினும் நவம்பர் 8, 1949 அன்று கோட்சேவுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது. அவருடன் சேர்த்து நாராயண் அப்தேவுக்கும் மரணதண்டணை வழங்கப்பட்டது. இருவரும் அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949 அன்று இறக்கும் வரை தூக்கிலிடப்பட்டனர்.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1966 - ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது. * 1969 - வியட்நாம் போர்: வாஷிங்டன் டிசியில் 250,000- 500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபெற்றனர் * 1970 - சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது. * 1978 - டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர். * 1983 - வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது. * 1988 - சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.
* 1988 - பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது. * 1990 - அட்லாண்டிஸ் விண்ணோடம் எஸ்.டி.எஸ்-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது. * 2002 - ஹூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். * 2000 - இந்தியாவில் ஜார்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. * 2007 - வங்க தேசத்தில் ஏற்பட்ட பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் பலியானார்கள்.