யாழ்ப்பாணத்தில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது!
யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை பகுதியில் இருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.-
தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று முந்தினம் இடம்பெற்ற மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த சம்பவத்தில் 21 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.