
யாழ் வைத்தியசாலையின் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் எவ்வித தடையும் இல்லை- சி.யமுனாநந்தா
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அந்த மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இருதய நோயாளிகளுக்கான சிகிச்சைகள் நாளை முதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மகப்பேற்று பெண் நோயியல் சிகிச்சைப் பிரிவும் மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றப்பட்டு நாளை முதல் இயங்கவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தியேகமாக இயங்கி வந்த சிகிச்சையளிப்பு நிலையங்கள், தற்போது சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, அங்கு நோயாளர்கள் சென்று தங்களுக்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.