
யாழ்.மாவட்ட வெட்டுப்புள்ளி நிலையை தாண்டி சாதனை படைத்த மகாஜனா கல்லூரி மாணவி!
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இம்முறை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 ஆக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாஜனக் கல்லூரியில் இம்முறை 38 மாணவர்கள் 160 வெட்டுப்புள்ளி என்ற நிலையைத் தாண்டி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை மாவட்ட மற்றும் தேசிய தர நிலைகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வழங்கப்படவில்லை.