யாழிலிருந்து கொரோனா சிகிச்சை முடித்த 33பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு!
யாழ் போதனா வைத்தியசாலையின் கீழ் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இயங்கும் கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து சிகிச்சையை முடித்த 33 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என யாழ்போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் தலைவரின் அனுசரணையில் வீடுகளுக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் வேப்ப மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சிகிச்சை பெற்றவர்களில் இருவர் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு உதவிகளை புரிந்தமைகாக யாழ்.போதனா வைத்தியசாலையின் விசேட பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இதே சமயம் புதிதாக இன்று காலை 24 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். தற்போது 148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.