லாத்வியா, ரஷியாவிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: 18-11-1918

லாத்வியா, ரஷியாவிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: 18-11-1918

லாத்வியா 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி ரஷியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. லாத்வியா வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1, 2004-லிருந்து அங்கம் வகிக்கின்றது.

 

லாத்வியா 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி ரஷியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

லாத்வியா வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1, 2004-லிருந்து அங்கம் வகிக்கின்றது.

 


இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1803 - எயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது. * 1863 - டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டார். இது 1864-ல் ஜெர்மன்- டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது. * 1883 கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன. * 1903 - பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

* 1909 - நிகராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது. * 1918 - லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. * 1926 - ஜார்ஜ் பெர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார். * 1943 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பெர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இதில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப்பட்டன. * 1943 - உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள் நாசிப் படைகளினால் கொல்லப்பட்டனர்.

* 1947 - நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் கொல்லப்பட்டனர். * 1978 - கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர். * 1987 - லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்கத் ரெயில் நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

* 1989 - கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது. * 1991 - தமிழீழ காவல்துறையின் முதலாவது அணி பயிற்சி முடிந்து வெளியேறியது. * 2006 - ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.