பாம்பு தீண்டலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம்

பாம்பு தீண்டலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தின் பணிகளை நிறைவு செய்து வெளியேறும் நேரத்தில் அவர் பாம்பு தீண்டலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவருக்கு விசமிறக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.