பலாலி பகுதியில் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்ட குண்டுகள்!

பலாலி பகுதியில் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்ட குண்டுகள்!

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 2எறிகணை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட 2 எறிகணை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளை கண்டுள்ளார் உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குண்டுகளை செயலிழப்பதற்காக வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள தரவை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.