வடக்கில் நால்வருக்கு கொரோனா - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்

வடக்கில் நால்வருக்கு கொரோனா - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்

யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலை ஆய்வு கூடத்தில்  322 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்களில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது எனவும்,

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருக்கும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்படும் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.