யாழில் நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்துக்குள்ளானவர் மரணம்!-

யாழில் நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்துக்குள்ளானவர் மரணம்!-

யாழ்ப்பாணத்தில் நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யோகநாதன் ஜெகதீஸ்வரன் (வயது-43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த இவர் கடந்த தீபாவளியன்று வடமராட்சிப் பகுதிக்குச் சென்று திரும்பி வரும்போது, வல்லைச் சந்தியில், சமயச்சடங்கிற்காக உடைத்த நீத்துப் பூசணிக்காயில் மோட்டார் சைக்கிள் சறுக்கிய வேளை, எதிரே வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானார்.

உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணித்தார்.

இவரது மரணம் தொடர்பான விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.