
கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரண்டு பேர்! தீவிர விசாரணையில் பொலிஸார்
கொழும்பு பொரள்ளை வனாத்தமுல்ல பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு ஏற்பட்ட தனிமைப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. பொரள்ளை சரணபால மாவத்தை சேர்ந்த 58 வயதான நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து பொரள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஹம்பாந்தோட்டை கொன்னோருவ பிரதேசத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 27 வயதான இளைஞன் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இரண்டு பேர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹம்பாந்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.