
ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை நிறுவப்பட்டது.
ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை நிறுவப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயார்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர். * 1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. * 1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28-வது மாநிலமாக இணைந்தது. * 1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.
* 1876 - ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் ரெயில்வே பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர். 1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
* 1891 - தாமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார். 1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார். 1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.