300 கொரோனா தொற்றாளர்களை ஒரிடத்திற்கு அழைத்துள்ள பிரித்தானியா...!
கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் அதிகரித்தமையை தொடர்ந்து தடுப்பூசி ஒன்றினை செலுத்தி பரிசோதனை செய்ய தயாராகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சிலருக்கு இந்த தடுப்பூசியினை செலுத்தி பரிசோதனைகளை மேற்கொள்ள பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 300 பேர் இந்த பரிசோதனைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் பிரித்தானியாவில் 38998 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 24 இலட்சத்து 63 ஆயிரரத்து 166 பேர் மொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நாடாக பிரேசில் காணப்படுகின்றது.
இதற்கமைய பிரேசிலில் 40995 பேருக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.