மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட நாள்: 3-1-1958

கரிபியன் தீவுகள் என்பது 2,500 மைல்கள் நீளமும் 160 மைல்களுக்கும் குறைவான அகலமும் கொண்ட ஒரு தீவுத் தொடராகும்.

கரிபியன் தீவுகள் என்பது 2,500 மைல்கள் நீளமும் 160 மைல்களுக்கும் குறைவான அகலமும் கொண்ட ஒரு தீவுத் தொடராகும்.

இப்பகுதியில் மொத்தம் 7,000 தீவுகள், சிறு தீவுகள், reefs, மற்றும் cays ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கரிபியன் கடலை சுற்றிலும் ஒரு தீவு சங்கிலியாக இவை படர்ந்து கிடக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்காக தெற்கே புளோரிடா முதல் வெனிசுலா வரை 4 ஆயிரம் கி.மீ., நீளத்துக்கு தீவுகள் சிதறியிருக்கின்றன. இதில் 11 சுதந்திர நாடுகளும் பிற நாடுகளின் ஆட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளும் உள்ளன.

 


மேற்கிந்திய தீவில் கியூபா, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, ஜமைக்கா, பார்படோஸ், பஹாமாஸ், டிரினாட் மற்றும் டொபாகோ, டொமினிக்கா, செயின்ட் கிட்ஸ் நெவிஸ், செயின்ட் லூஸியா, செயின்ட் வின்சென்ட் கிரெனடா, ஆன்டிகுவா, பார்புடா என்ற நாடுகள் சேர்ந்ததே மேற்கிந்திய தீவு. இவற்றில் மிக பெரிய நாடு கியூபாவே. கரிபியன் கடலில் ஒரு பெரிய தீவையும், ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளையும் கொண்ட நாடுதான் கியூபா. மேற்கிந்தியாவின் ஒரு பகுதியான ஆன்டிலிஸின் மிக அழகிய தீவு கியூபாவே. இதனால்தான் இதனை ஆன்டிலிஸின் முத்து என்று அழைக்கின்றனர். அமெரிக்க கடற்படை கேந்திரங்களில் ஒன்றாக விளங்கும் குவன்டனாமா, கியூபாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

மேற்கிந்தியத் தீவுகள் என்பவை அண்டிலெஸ் மற்றும் பஹாமாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். பொதுவாக, மேற்கிந்தியத் தீவுகள் என்பது வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகவும் விடுதலை பெற்ற நாடுகள், வெளிநாட்டுத் தாபனங்கள், மற்ற நாடுகளில் தங்கியிருக்கும் பிரதேசங்கள் என மொத்தம் 28 தனியான பிரதேசங்களை உள்ளடக்கியவை ஆகும். ஒரு காலத்தில் 10 ஆங்கிலம்-பேசும் நாடுகளைக் கொண்ட "மேற்கிந்தியக் கூட்டமைப்பு" என்ற நாடு சிறிது காலம் இங்கிருந்தது.

ஐரோப்பிய மாலுமிகலான வாஸ்கோடகாமா போன்ற பயணிகள் இந்தியாவுடன் கடல் வழி வாணிபம் செய்வதற்காக பயணவழி வரையறுத்ததன் விளைவாக இந்த மேற்கிந்திய தீவுகள் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இந்த தீவுக்கூட்டங்கள் தான் இந்தியா என்று தவறாக கணித்த மாலுமிகள் பின்னர் அது இந்திய நிலப்பகுதி இல்லை என்று தெரிந்து கொண்டதும் இதற்க்கு மேற்கிந்திய தீவுகள் என அழைக்க தொடங்கினர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1815 - ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் ரஷ்யாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின. * 1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா கைப்பற்றியது. * 1859 - தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது. * 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது. * 1870 - புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின. * 1921 - துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது. * 1924 - பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.

* 1925 - இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக முசோலினி அறிவித்தார். * 1932 - பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர். * 1947 - அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. * 1956 - ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது. * 1957 - முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது. 1959 - அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49-வது மாநிலமானது. * 1961 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது. * 1961 - இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் பலியானார்கள் * 1966 - இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் டாஷ்கெண்டில் ஆரம்பமாயின. * 1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது. * 1977 - ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.

* 1990 - பனாமாவின் முன்னாள் அதிபர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார். * 1994 - ரஷ்யாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர். * 1995 - விடுதலைப் புலிகள்- இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது. 2004 - எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் கொல்லப்பட்டனர்.