படைகளை குவிக்கும் சீனா! அம்பலப்படுத்திய செயற்கோள் புகைப்படம்

படைகளை குவிக்கும் சீனா! அம்பலப்படுத்திய செயற்கோள் புகைப்படம்

கால்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் படைகளை சீனா குவித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய செயற்கைக்கோள்கள் இது தொடர்பில் படங்களை வெளியிட்டுள்ளன.

லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15 ஆம் திகதி ஊடுருவ முயன்ற சீன இராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்தனர்.

இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.