மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த 220 பேரிடம் கொரோனா பரிசோதனை..! 03 பேருக்கு தொற்றுறுதி

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த 220 பேரிடம் கொரோனா பரிசோதனை..! 03 பேருக்கு தொற்றுறுதி

மேல் மாகாணத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்த 377 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் 220 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளும் 157 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 220 பேரில் மூவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அதேபோல், 157 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வரவுள்ளதாகவும் குறிப்படப்படுகின்றது.
 

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 532 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 880 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 432 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 93 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 23 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இத்தாலி மற்றும் சுடானில் இருந்து இலங்கை வந்த தலா மூன்று பேரும், ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் அவர்களில் அடங்குகின்றனர்.

6 ஆயிரத்து 897 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், நேற்றைய தினம் 638 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் 39 ஆயிரத்து 661 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, கலஹா காவல்நிலையத்தில் பெண் காவற்துறை அதிகாரி உள்ளிட்ட 2 காவல்துறை அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்