
அநுராதபுரத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம்
அநுராதபுரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பாலியல் சுகாதார சேவைகள் மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அஜித் கரவிட இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பதிவான அநுராதபுரத்தில் 21 எயிட்ஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
எனினும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நான்கு எச்.ஐ.வி தொற்று நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்றும், 2023 முதல் இன்றுவரை அநுராதபுர மாவட்டத்தில் 155 நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.