
வாடகை வீட்டிலிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு
சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த 30 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை பொலிஸ் பிரிவின் பெலென்னாவத்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (27) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை பொலஸ் நிலையத்தில் கிடைத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இறந்த பெண் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிலியந்தலை பொலிஸார் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.