மிகப் பழமையான சுரங்க ரெயில்பாதை லண்டனில் திறக்கப்பட்ட நாள்: 10-1-1863

லண்டனில் மிகப் பழமையான சுரங்க ரெயில்பாதை 1863-ம் ஆண்டு இதே நாளில் திறக்கப்பட்டது.

லண்டனில் மிகப் பழமையான சுரங்க ரெயில்பாதை 1863-ம் ஆண்டு இதே நாளில் திறக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-


* 1806 - கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர். *  1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜோசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான். * 1840 - ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது. * 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.

* 1863 - உலகின் மிகப் பழமையான சுரங்க ரெயில் பாதை லண்டனில் திறக்கப்பட்டது. * 1881 - யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. * 1920 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமாது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. * 1924 - பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர். * 1946 - லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின. * 1962 - பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர். * 1974 - யாழ்ப்பாணத்தில் 4-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குக் கொல்லப்பட்டனர்.

* 1984 - 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. * 1989 - கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன. * 1995 - உலக இளைஞர் நாள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்றது. 2001 - விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்படட்து. இது பின்னர் 5 நாட்களின் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது. 2005 - தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாநாட்டில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.