அசுர வேகமெடுக்கும் சீனா! ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு

அசுர வேகமெடுக்கும் சீனா! ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு

சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தனது உலகளாவிய இராணுவ திறனை மதிப்பாய்வு செய்து வருகிறது என அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

வீடியோ கொன்பரன்சிங் மூலம் நடைபெற்ற ஜெர்மன் மார்ஷல் நிதியத்தின் பிரஸ்ஸல்ஸ் மன்றம் 2020 கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ பேசும் போது கூறியதாவது,

இந்தியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சீனாவின் இராணுவம் அச்சுறுத்தலாக இருக்கத் தொடங்கியுள்ளது.

சீனா இராணுவத்தை எதிர்ப்பதற்கு நாங்கள் சரியான முறையில் செயல்கொள்கிறோம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தப் போகிறோம். இது சவால் என்று நாங்கள் நினைக்கிறோம், அதைச் செய்வதற்கான சக்தி எங்களிடம் உள்ளன என்பதை உறுதிப்படுத்தப் போகிறோம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் படை தோரணையை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார், மேலும் ஜெர்மனியில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கை சுமார் 52,000 முதல் 25,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

மற்றநாடுகளில் அமெரிக்க படையை குறைக்கும். இனி அவர்கள் சொந்த பாதுகாப்பை செய்து கொள்ள வேண்டும். உலகெங்கிலும் உள்ள எங்கள் கூட்டாளிகள் அனைவருடனும், நிச்சயமாக ஐரோப்பாவில் உள்ள எங்கள் நண்பர்களுடனும் இது குறித்து முழு ஆலோசனை செய்ய விரும்புகிறோம்.

உலகெங்கிலும் எங்கள் படை தோரணையைப் பற்றி ஒரு மூலோபாய ஆய்வு செய்யப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டன. சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, அது ஆப்பிரிக்கா,ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் உள்ளன என கூறியுள்ளார்.