
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனை கடந்தது!
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனை கடந்தது.
இதற்கமைய, கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் மொத்தமாக 25 இலட்சத்து 4 ஆயிரத்து 588பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், வைரஸ் தொற்றினால் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 780பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 40,184பேர் பாதிக்கப்பட்டதோடு, 649பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி 39,099பேர் பாதிக்கப்பட்டதே நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது. அதேவேளை பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், உயிரிழப்பின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.
2,500 என்ற நிலையில் சென்ற நாளொன்றுக்கான உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது ஆயிரத்திற்குள் நகர்கின்றது. மேலும், 1,325,515பேர் வைரஸ் தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 1,052,293பேர் குணமடைந்துள்ளனர். 15,723பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.