கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு தவறுதலாக 1.4 பில்லியன் டொலர்களை அனுப்பிய அமெரிக்கா!

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு தவறுதலாக 1.4 பில்லியன் டொலர்களை அனுப்பிய அமெரிக்கா!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயால் உயிரிழந்தவர்களுக்கு, அமெரிக்க திறைசேரி, தொற்றுநோய் மீட்பு நிதியில் 1.4 பில்லியன் டொலர்கள் தவறுதலாக அனுப்பியதாக அரசாங்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 1.1 மில்லியன் இறந்தவர்களுக்கு தலா 1,200 டொலர் செலுத்தியதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்க அரசாங்க பொறுப்புக்கூறல் அலுவலகம் (யு.எஸ்.ஜி.ஏ.ஓ) தெரிவித்துள்ளது.

அமெரிக்க குடும்பங்களுக்கு நிவாரண காசோலைகளை அனுப்பும் பொறுப்பில் இருந்த திறைசேரி திணைக்களம், இறப்பு பதிவுகளை சரிபார்க்கவில்லை என்று அரசாங்க பொறுப்புக்கூறல் அலுவலகம் (ஜிஏஓ) அறிக்கை கூறுகின்றது.

இறந்தவர்கள் பணம் பெற வேண்டுமா என்ற குழப்பம் காரணமாக தவறான கொடுப்பனவுகள் செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிப்பிழைத்தவர்களிடம் பணத்தை திருப்பித் தருமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டாலும், அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் அறிவிக்கப்படவில்லை.

மேலும் 1.48 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்மை உதவித்தொகைக்காக, உதவி கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொற்றுநோய் பரவியதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் சுமார் 47 மில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.