
வடகொரிய அதிபர் தொடர்பில் மீண்டும் மர்மம்! குழப்பத்தில் சர்வதேசம்
வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து சந்தேகங்கள் இருப்பதாக ஜப்பான் கூறியுள்ளதால், மீண்டும் கிம் ஜாங் உன்னைப் பற்றிய சந்தேகங்கள் எழுத் தொடங்கியுள்ளன.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சில நாட்கள் பொதுவெளியில் தென் படாமல் இருந்ததால், அவர் இறந்துவிட்டதாகவும், அவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் அது எல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில், கிம் ஜாங் உன் வடகொரியாவின் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் சில நாட்கள் கழித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.