ரஷ்ய ஜனாதிபதி புடினின் பதவிக்காலத்தை நீடிக்கும் சட்டமூலம் மீதான பொது வாக்கெடுப்பு ஆரம்பம்!

ரஷ்ய ஜனாதிபதி புடினின் பதவிக்காலத்தை நீடிக்கும் சட்டமூலம் மீதான பொது வாக்கெடுப்பு ஆரம்பம்!

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை, மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்ற சட்டமூலம் மீதான பொது வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இந்த பொது வாக்கெடுப்பில், மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

7 நாட்களுக்கு நடைபெறும் இந்த பொதுவாக்கெடுப்பில் சட்டத் திருத்த சட்டமூலம் வெற்றிபெற்றால், அது அமுலுக்குக்குக் கொண்டு வரப்படும்.

இந்த சட்டமூலத்தின் மூலம் எதிர்வரும் 2036ஆம் ஆண்டு வரையில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை.

நான்காவது முறையாக ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவி வகித்துவரும் விளாடிமிர் புடினின் பதவிக் காலம், 2024ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒருவரால் 4 முறை மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்.

இதனால், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவதற்கு வழி ஏற்படுத்துவதற்கான திருத்தங்களை அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்வதற்கான சட்டமூலத்துக்கு, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.