போதைப்பொருள் தொடர்பில் விரைவான நடவடிக்கை - காவல் துறை ஊடகப் பேச்சாளர்

போதைப்பொருள் தொடர்பில் விரைவான நடவடிக்கை - காவல் துறை ஊடகப் பேச்சாளர்

போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் விரைவாக நடவடிக்கைகள் முன்னெக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 காரணமாக காவல்துறை அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளபோதிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மதுவரி திணைக்களத்தினர் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் ஆகியோரால் போதைப்பொருள் வர்த்தகர் கைதுசெய்யப்படுகின்றனர்.

தற்போது ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பாவணை குறைவடைந்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.