ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6434 பேர் பலியாயினர் (ஜன.17, 1995)

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6434 பேர் பலியாயினர் (ஜன.17, 1995)

ஜப்பானின் கோபே நகரில் 1995-ஆம் ஆண்டு இதே நாளில் 7.3 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 6434 பேர் பலியாயினர். மேலும், பலத்த சேதங்களும் ஏற்பட்டது.

 

ஜப்பானின் கோபே நகரில் 1995-ஆம் ஆண்டு இதே நாளில் 7.3 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 6434 பேர் பலியாயினர். மேலும், பலத்த சேதங்களும் ஏற்பட்டது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

 


• 1377 - போப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.
• 1595 - பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான்.
• 1773 - கேப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.
• 1899 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.
• 1917 - கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.
• 1928 - லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
• 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரைக் கைப்பற்றினர்.
• 1946 - ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.
• 1951 - சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.
• 1973 - பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சின் நிரந்தர அதிபர் ஆனார்.
• 1991 - வளைகுடாப் போர் ஆரம்பித்தது.