பொலிஸ் உத்தியோகத்தரால் சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை

பொலிஸ் உத்தியோகத்தரால் சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை

14 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரத பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன்டே கைது செய்யப்பட்டவராவார்.

அனுராதபுர நகருக்கு அருகில் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.