இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..! முழுமையான விபரங்கள்..!

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..! முழுமையான விபரங்கள்..!

நாட்டில் மேலும் ஆறு கொவிட்19 மரணங்கள் நேற்று பதிவாகின

இதற்கமைய இதுவரை நாட்டில் பதிவான மொத்த கொவிட்19 மரணங்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்துள்ளது

கொழும்பு 3 பகுதியை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நியுமோனியா மற்றும் நிரிழிவு தீவிரமடைந்தமை என்பனவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது, மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியாவாகும் என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் முதியோர் இல்லத்தில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 நியுமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நியுமோனியா, இதய நோய் மற்றும் நீரிழிவு தீவிரமடைந்தமையாகும்.

தெஹிவளை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொவிட்19 தொற்றுறுதியானவராக அடையாளம் காணப்பட்டார்.

அதன்பின்னர் அவர் இரணைவில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர், ஹோமாகம பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது, மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியாவாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை தெரிவித்துள்ளது.