
இந்திய மீனவர்களது சடலங்களை இன்று நள்ளிரவு கையளிக்க ஏற்பாடு
நெடுந்தீவுக் கடலில் உயிர்நீத்த நான்கு இந்திய மீனவர்களினது சடலங்களும் இன்று நள்ளிரவு, நடுக்கடலில் வைத்து இந்திய கரையோரக் காவல் படையினரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை கடற்படை ரோந்துக் கப்பலுடன் மோதியதில் உயிரிழந்த 4 மீனவர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிசிஆர். பரிசோதனையின் பின் இன்றைய தினம் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் நீதிமன்ற அனுமதியுடன் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டு, அவர்களால் காங்கேசன்துறை எடுத்துச்செல்லப்பட்டு இலங்கை கடற் படையினரிடம் கையளிக்கப்படவுள்ளன.
இலங்கை கடற்படையினர் அவற்றை எடுத்துச் சென்று இந்திய கரையோரக் காவல் படையினரிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.