
நடுக்கடலில் வைத்து கையளிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் சடலங்கள்
நெடுந்தீவு கடற்பரப்பில் ஸ்ரீலங்கா கடற்படையின் படகுடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து கடலில் மூழ்கி உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கடற்பரப்பில் வைத்து இன்று முற்பகல் இந்த உடல்கள் இந்திய கடலோரக் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
கடந்த 18ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையின் அதிவேக ரோந்து படகுடன் இந்திய மீனவர்கள் பயணித்த றோலர் படகு மோதியதில் படகுடன் சேர்ந்து மூழ்கிய இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர்களின் உடல்கள் கோட் டைப்பட்டினம் கொண்டு வரப்பட்டது. அங்கு தயார் நிலையில் 4 அமரர் ஊர்தி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஏற்றி மீனவர்களின் உடல்கள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.