இளம் தாயின் விபரீத செயல் - குழந்தையின் உயிரும் பறிபோனது

இளம் தாயின் விபரீத செயல் - குழந்தையின் உயிரும் பறிபோனது

தனது நான்கு வயது மகனை கொலை செய்த தாய் ஒருவர் தானும் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பங்களாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 24 வயது தாயாரே தனது 4 வயது மகனை கொலை செய்து உயிரிழந்தவராவார்.

நேற்றையதினம் குழந்தையின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்ற தாய், அதே சேலையால் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்ட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாட்டுக்கு செல்லும் விவகாரம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது தாய்க்கும் இடையே இடம்பெற்ற தகராறை அடுத்தே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.