
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா தொற்றினால் சர்வதேச ரீதியாக உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 96 ஆயிரத்து 915 பேராக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பத்து மில்லியனை கடந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் நேற்றைய தினம் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் 47 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2,552,956 ஆக உயர்வடைந்துள்ளது.