
கொவிட்-19: பிரேஸிலில் ஒரேநாளில் 46,907பேர் பாதிப்பு- 1,055பேர் உயிரிழப்பு!
பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில், 46,907பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 1,055பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிரேஸிலில் 12 இலட்சத்து 80 ஆயிரத்து 054பேர் மொத்தமாக வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். இதேபோல, 56 ஆயிரத்து 109பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 526,419பேர் வைரஸ் தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 697,526பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8,318பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் தொற்று பரவிய ஆரம்பத்தில் பிரேஸிலில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது தினசரி பாதிப்பின் எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகின்றது.