கம்பஹா மாநகர சபையின் யக்கல உப காரியாலயத்திற்கு பூட்டு..!

கம்பஹா மாநகர சபையின் யக்கல உப காரியாலயத்திற்கு பூட்டு..!

கம்பஹா மாநகர சபையின் யக்கல உப காரியாலயம் மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

யக்கல உப காரியாலயத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையின் போது உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்தே யக்கல உபகாரியாலயம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாநகர சபையின் யக்கல உப காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து பணிகளையும் கம்பஹா நகர சபையில் முன்னெடுக்கமுடியும் என கடமை நேர அதிகாரி ஒருவர் எமது சேவைக்கு தெரிவித்தார்.