
யாழில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையம்! நேரில் சென்றார் சவேந்திர சில்வா
யாழ்ப்பாணம் - வசாவிளானில் அவசர தேவைக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தை கோவிட் -19 வெடிப்பைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் ராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆய்வு செய்தார்.
சுமார் 1000 நபர்கள், தனிமைப்படுத்தலுக்காகவோ அல்லது பராமரிப்புக்காகவோ இந்த நிலையத்தை அவசர காலங்களில் பயன்படுத்தலாம் .
இந்த திட்டத்தைப் பற்றி 521 படையணியின் தளபதி கேர்னல் மகேன் சல்வதுரவிடமிருந்து ஒரு முழுமையான கண்ணோட்டத்தை ஷவேந்திர சில்வா பெற்றார்.
மேலும் எதிர்காலத்தில் அவசரகால தேவை ஏற்பட்டால் இதற்கான செயல்பாட்டு முறைகள் மற்றும் பிற தொடர்புடைய அம்சங்களைப் பற்றி கேட்டறிந்தார்.