
சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்த நாள்: 1-2-1924
ரஷ்யா அதன் அருகில் உள்ள நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியமாக விளங்கியது. அதை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்தது. இதே நாளில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:- * 1814 - பிலிப்பைன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். * 1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை (mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது. * 1864 - டென்மார்க்- புரூசியா போர் ஆரம்பமானது. * 1880 - யாழ்ப்பாணத்திற்கும்
ரஷ்யா அதன் அருகில் உள்ள நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியமாக விளங்கியது. அதை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்தது. இதே நாளில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-
* 1814 - பிலிப்பைன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். * 1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை (mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது. * 1864 - டென்மார்க்- புரூசியா போர் ஆரம்பமானது. * 1880 - யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி (mail coach) சேவையை ஆரம்பித்தது. * 1884 - ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் முதற்பதிப்பு வெளியானது. * 1893 - தாமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜெர்சியில் கட்டி முடித்தார். * 1908 - போர்ச்சுக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவனது மகன், இளவரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்லப்பட்டனர். * 1913 - உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயார்க் நகரில் திறக்கப்பட்டது. * 1918 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
* 1946 - நார்வேயின் ட்றிகிவா லீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகமாகத் தேர்வு செய்யப்பட்டார். * 1958 - எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின. * 1974 - பிரேசிலில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் கொல்லப்பட்டனர். * 1979 - 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி டெஹ்ரான் திரும்பினார். * 1998 - கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல்- 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது. * 2004 - சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் கொல்லப்பட்டனர்.
* 2005 - நேபாள மன்னர் ஞானேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். * 2005 - கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது. * 2007 - மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.