நேர்மைக்கு கிடைத்த பரிசு -ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியான ஏழை கூலித் தொழிலாளி

நேர்மைக்கு கிடைத்த பரிசு -ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியான ஏழை கூலித் தொழிலாளி

தான்சானியா நாட்டில் உள்ள வடக்குப் பகுதியில் ஏராளமான சுரங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அங்குள்ள சுரங்கம் ஒன்றில் பணியாற்றி வந்த ஏழைத் தொழிலாளி சானினியூ லைசர் என்பவர் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது, இரண்டு பெரிய ரத்தினக்கற்களை எடுத்தார்.

நீல ரத்தினக்க் கற்களான அவை ,ஒன்று 9.2 கிலோ எடையும் மற்றொன்று 5.8 கிலோ எடையும் கொண்டுள்ளன. இதை அவர் அரசிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையைப் பாராட்டிய அந்நாட்டு அரசு அவருக்கு (இந்திய மதிப்பில்) ரூ. 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஏழைக்கூலித் தொழிலாளியாக இருந்தவர் இன்று ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.