பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தொடர்பான விபரத்தை அறிவித்த பொலிஸ்

பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தொடர்பான விபரத்தை அறிவித்த பொலிஸ்

கிளாஸ்கோ நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தின்போது அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் சூடான் நாட்டைச் சேர்ந்த பத்ரெடின் அபாட்லா ஆடம் என அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் குத்தி கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வேறு எந்த சந்தேக நபர்களையும் தேடவில்லை என்றும் இந்த சம்பவத்தை பயங்கரவாதமாக கருதவில்லை என்றும் தெரிவித்த பொலிஸார் தாக்குதல் நடத்தியவர் மட்டுமே கொல்லப்பட்டார் என்றும் அறிவித்துள்ளனர்.

காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர்களில் 3 பேர் புகலிடம் கோரிகையாளர்கள் என்றும் இருவர் ஹோட்டல் ஊழியர்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.