உலகின் பிரபல பாப் பாடகரான பாப் மார்லி பிறந்த தினம் (பிப்.6, 1945)

உலகின் பிரபல பாப் பாடகரான பாப் மார்லி பிறந்த தினம் (பிப்.6, 1945)

யமேக்கா ரெகே இசைக்கலைஞரும், இசைப் பாடகருமான பாப் மார்லி 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் ஜமைக்காவில் பிறந்தார். உலகில் பல ரெகே இசைக் கலைஞர்களின் ஆல்பங்களில் இவருடைய ஆல்பங்கள்தான் அதிகம் விற்றவை. த வெய்லர்ஸ் இசைக்குழுவின்

 

யமேக்கா ரெகே இசைக்கலைஞரும், இசைப் பாடகருமான பாப் மார்லி 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் ஜமைக்காவில் பிறந்தார். உலகில் பல ரெகே இசைக் கலைஞர்களின் ஆல்பங்களில் இவருடைய ஆல்பங்கள்தான் அதிகம் விற்றவை. த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ராஸ்த ஃபாரை இயக்கத்தில் இவரும் முக்கியமானவர் ஆவார்.

 

 

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.

1938 - ஆஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.

1951 - நியூஜெர்சியில் பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

1952 - இரண்டாம் ஜார்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட 7 நாடுகளுக்கு அரசியானார்.

1958 - ஜெர்மனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைடெட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் கொல்லப்பட்டனர்.

1959 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

1996 - அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

2000 - டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்.

2004 - மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.