
பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டாயம்
கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் அதிகரிப்புக்குப் பின்னர் அவுஸ்ரேலியாவின் விக்டோரியாவிற்கு திரும்பும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா வைரஸ் சோதனைகள் அமுல்படுத்தும் என அம்மாநில முதல்வர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.
நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் இன்று 49 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த 12 ஆவது நாளாக இரட்டை இலக்க அதிகரிப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இன்று கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர், விக்டோரியாவில் இந்த வார தொடக்கத்தில் திரும்பி வந்த பயணிகளில் சுமார் 30 விகிதமானோர் கொரோனா வைரஸ் சோதனையை மறுத்துவிட்டதாகவும், இது ஒரு கட்டாய நடைமுறை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் இரண்டு முறை சோதிக்கப்படுவார்கள் என்றும் இன்னும் சோதனையை மறுப்பவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.