
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் துருப்புக்களைத் தாக்க தலிபான் போராளிகளுக்கு பணம் கொடுத்த ரஷ்யா..!
ஆப்கானிஸ்தானில் கூட்டணி படையினரைக் கொல்ல ஒரு ரஷ்ய உளவுத்துறை தலிபான் போராளிகளுக்கு பணம் கொடுத்ததாக வெளியான தகவல்கள் உண்மைதான் என்று பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு தேசத்திற்கு அமைதியைக் கொண்டுவர முயற்சிக்கும் வீரர்களைத் தாக்க வெகுமதிகளை வழங்குவது வெறுக்கத்த விடயம் என்றும் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில், முக்கியமாக தலைநகர் காபூலில் தற்போது சுமார் 1,000 பிரிட்டிஷ் துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன இருப்பினும் ரஷ்ய முயற்சிகளின் விளைவாக எந்தவொரு இழப்பும் ஏற்படவில்லை.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் 20 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சமாதான ஒப்பந்தத்தை சீர்குலைக்க மொஸ்கோ முயற்சித்து வருவதாக கருதப்படுகிறது.