
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் கலந்துரையாடல்...!
பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கை - ஜப்பான் கொள்கை உரையாடலின் இரண்டாவது சுற்று, இணையவழி மெய்நிகர் ரீதியாக இரு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சுக்களினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்திக் கூட்டாண்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முக்கிய பகுதிகளை இரு தரப்பினரும் இதன்போது மதிப்பாய்வு செய்துள்ளனர்.
பொருத்தமான சமகாலத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது