வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 வைத்திய உத்தியோகத்தர்கள் நியமனம்

வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 வைத்திய உத்தியோகத்தர்கள் நியமனம்

சுகாதார அமைச்சினால் வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு புதிதாக 50 வைத்திய உத்தியோகத்தர்கள் நேற்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்களில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 13 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 9 பேரும், வவுனியா மாவட்டத்திற்கு 11 பேரும், மன்னார் மாவட்டத்திற்கு 8 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த நியமனத்தில் வடமாகாணத்தின் கஷ்ட பிரதேசங்களிலுள்ள சில வைத்தியசாலைகளுக்கும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை, அனலைதீவு வைத்தியசாலைகளுக்கும், வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், நெடுங்கேணி வைத்தியசாலைகளுக்கும், மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், சிலாவத்துறை, வங்காலை வைத்தியசாலைகளுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, புதுக்குடியிருப்பு, அலம்பில் ஆகிய வைத்தியசாலைகளுக்கும் வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்