
சூயஸ் கால்வாய் வழியாக முதன்முதலாக கப்பல் போக்குவரத்து தொடங்கிய நாள் (பிப்.17, 1869)
மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் விதமாக 163 கி.மீ. நீளமும், 300 மீ அகலமும் செயற்கையாக தோண்டப்பட்ட கால்வாய்தான் ‘சூயஸ் கால்வாய்’. இது எகிப்தில் அமைந்துள்ளது. இக்கால்வாய் 1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கப்பல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இக்கால்வாய் வெட்டப்பட்டதன் மூலம் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பல் போக்குவரத்து மிகவும் இலகுவானது. அதன்முன்னர் கப்பல் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.
மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் விதமாக 163 கி.மீ. நீளமும், 300 மீ அகலமும் செயற்கையாக தோண்டப்பட்ட கால்வாய்தான் ‘சூயஸ் கால்வாய்’. இது எகிப்தில் அமைந்துள்ளது.
இக்கால்வாய் 1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கப்பல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இக்கால்வாய் வெட்டப்பட்டதன் மூலம் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பல் போக்குவரத்து மிகவும் இலகுவானது. அதன்முன்னர் கப்பல் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.
பிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி 8 வருடகாலமாக தொடர்ந்து நடந்தது. 1867-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இக்கால்வாயின் வெற்றி பிரான்ஸ் நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது.
இக்கால்வாய் வழியாக ஏறக்குறைய 15 ஆயிரம் கப்பல்கள் ஓரு ஆண்டில் கடக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயை கடக்க 16 மணி நேரம் ஆகிறது.