
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை: முதல் ஆளாகத் தாக்குதல் நடத்த சீனா திட்டம்!
இந்தியாவை குறைத்து எடைபோடக் கூடாது எனவும், இந்தியாவை முதல் ஆளாகத் தாக்க சீனா தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரல் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் தெரிவித்துள்ளார்.
இந்தியா – சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்சினை போர் மூழும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நாம் போருக்கு தயாராக வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்தியா-சீனா பிரச்சினை இப்போது சரியாகாது. இது முழு அளவில் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே சீனா இதற்குத் தயாராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் முதல் ஆளாக படைகளை குவிக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
நாம் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சிறிய, சிறிய போர் மூலம் இந்தியாவைக் கட்டுப்படுத்த நாம் திட்டங்களை வகுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள் எனத் தெரிவித்த அவர், எல்லையில் ஆயுதங்களைக் குவிக்க ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா எப்போது வேண்டுமானாலும் அத்துமீறலை நிகழ்த்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அவர், முழுமையான பிரச்சினை தீர இப்போது வாய்ப்பு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளதுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் காலம் இனி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.